அலைபேசி அழைக்கும் போதெல்லாம்
உன் குரலோசை கேட்க
என் இதயம் துடிக்கிறது.
அணைக்க துடிக்கும்
உன் கரங்களை விட
என் கண்ணீரை துடைக்க உதவும்
கரங்களையே தேடுகிறேன்.
காத்திருந்து காத்திருந்து
இதயமும் இமையமும் கூட
வெற்று நிலமாகிவிட்டது.
புரியவில்லையா என் நெஞ்சம்
புரியாமல் துடிப்பை அடக்கும்
என் இதயத்தின் ஓசை
கேட்கவில்லையா உன் செவிகளில்.
ஐம்புலன்களையும்
அடக்க தெரியுமாம்
பெண்மைக்கு?
அறிவுகெட்ட சமுதாயம்,
சொன்னவனுக்கு எங்கே
தெரியும்பென்மையின்
உணர்ச்சியும் உத்வேகமும்.
காமமும் காதலும்தான்
ஆண்மையா?
அப்போது மிருகத்திடம்
உடைமையை வைத்துகொள்,
ஏன்
பெண்மையை
வதைக்கிறாய்?
பெண்மையை சோதிக்காதே!
என்
மனதின் மென்மையை
புரிந்துகொள்.
வந்துவிடு
என்னை ஆட்கொண்டுவிடு.
மிருகத்தின் உத்வேகமும் பெண்மையிடம் தோற்று போக காத்திருக்கிறேன்!!!!!!
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
பெண்மையின் உண்மைகள் பட்டவர்த்தனமாக சொல்லப்பட்டிருக்கிறது. தனிமையின் தாகம் இதமாய் வலிமையாய் சொல்லப்பட்டிருக்கிறது.
ReplyDelete