சிறகுகள் வலிக்கிறது
கடலில் அமர
ஒரு மரகிளை இல்லை
எனக்கு..
இதழ்கள் வரைய காத்திருக்கும்
உன் மௌன மொழி...
உன் மொழி என்னுயிரை
பதம் பார்க்கிறது!
'ம்' என்ற ஒற்றை எழுத்து
என் உணர்ச்சியின்
ஆழம் சென்று வலித்ததடா..
உன் கருவிழிகள்
செய்யாத காதலை
உன் மௌன மொழி உணர்த்தியது,
வலித்தது என் இதயம்...
என் கண்ணீரை ரசித்தது
உன்னுடைய அந்த
ஒற்றை எழுத்து...
மீண்டும் கேட்கிறது
என் நெஞ்சம் உன் மௌனத்தை...
வேய்ந்த கூரையில்
என் சேலை சிக்கியுள்ளது
எடுக்க துணிந்தும்
எடுக்காமல் என் மனம்...
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் அழகான அழ்ந்த பொருள் பொதிந்த எழுத்துகள்,
ReplyDelete#சிறகுகள் வலிக்கிறதுகடலில் அமரஒரு மரகிளை இல்லைஎனக்கு..
#உன் கருவிழிகள்செய்யாத காதலைஉன் மௌன மொழி உணர்த்தியது,
#வேய்ந்த கூரையில்என் சேலை சிக்கியுள்ளதுஎடுக்க துணிந்தும்எடுக்காமல் என் மனம்...
வலி சொல்லும் நுட்பம் இனிமை. சிந்தனை அழகு.